Sunday, January 23, 2011

பித்ரு தோஷம்

ஜாதகங்களை ஆராயும்போது முதலில் பித்ரு தோஷம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் .
அதிலும் துர்மரணம் ஆனவர்களின் தோஷம் மிகவும் கொடியது. பித்ரு தோஷம், பித்ரு
சாபம்,பித்ரு தாகம் ஆகியவற்றை ஆராய்ந்து சரியான முறையில் திலஹோமம் செய்து
பித்ருக்களை கரையேற்ற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு  ஆண்வாரிசு இருந்தால், முத்தவர் மட்டுமே தர்ப்பணம் போன்ற முன்னோருக்கான பிதுர் காரியங்களை செய்ய வேண்டும் என்று இருக்கின்றனர். இது தவறாகும் . இந்த ௫ ஆண் வாரிசும் தாயின் கர்ப்பத்தில் 10 மாதம் தனி தனியாக இருந்து உள்ளார்கள். இந்த குடும்பத்தில் சுமார் 10 லட்சம் மதிப்புடைய சொத்து இருந்தால் அதை மூத்தவருக்கு மட்டுமே கொடுத்துவிடுவார்களா? அந்த சொத்தில் தமக்கு உரிய பங்கை வாங்கிவிடுவார்கள்.அதே போல கர்மாவையும் தன்னுடைய பங்கை செய்யவேண்டும்.தர்ப்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக கொடுத்தலாகும். அகத்தியர்,வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் கூட தங்கள் முன்னோர்களை தர்ப்பணம் என்ற பித்ரு பூஜை முறைல்யில் வணங்கி பலன் பெற்று உள்ளனர்.


  

No comments:

Post a Comment