Sunday, January 30, 2011

தாமிரபரணி மகத்துவம்

                                             தாமிரபரணி மகத்துவம்


நதி என்றால் மேற்கே தோன்றி கிழக்கே கடலில் சேர வேண்டும். நதிக்கரையில்தான் மாபெரும் தேசங்களும், நாகரீகங்களும்,ஏற்பட்டுஇருகின்றன. நதிக்கரையில் எராளமான கோவில்கள் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ வால்மீகி முனிவர் தமசநதிக்கு செல்லும் போது உருவானதுதான் தலை சிறந்த காவியமான ராமாயணம்.
 தான் சுத்தமாகி அசுத்தமானவைகளை சுத்தமாக்குவதே நீராகும். சுத்தம் புண்ணியத்தை தரும். அந்த புண்ணியத்தை அளக்கும் அளவுகோலை கிருச்சரம் என்று கூறுவார்கள். பத்தாயிரம் காயத்திரி ஜெபித்தால் அது ஒரு கிருச்சர பலனை தரும். வேதபாராயணம்,கோ தானம் பிராமணபோஜனம்  போன்றவை இன்ன கிருச்சர பலனை தரும் என்று அளவிட்டு தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோல் சமுத்திரஸநானமான   ராமேஸ்வரம, மகாநதி ஸ்நாணம் பல மடங்கு கிருச்ச பலனைத் தரும்.

No comments:

Post a Comment